search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலியல் துஷ்பிரயோகம்"

    புதுடெல்லியில் மாங்கல்ய தோஷம் இருப்பதாக கூறி, 23 வயது இளம் பெண் ஒருவரை அவரது உறவினரே 4 ஆண்டுகளாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Delhi
    புதுடெல்லி:

    டெல்லியை சேர்ந்த 23 வயது பெண்ணை அவரது உறவினர் மாங்கல்ய தோஷம் இருப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து வந்து உள்ளார். தோஷத்தை சரி செய்யாவிட்டால் அவரது தந்தை இறந்துவிடுவார் என்று கூறி அச்சுறுத்தி உள்ளார். இந்த கொடுமை 4 வருடங்களாக நடந்து உள்ளது.

    இதையடுத்து சமீபத்தில் அந்த பெண்ணுக்கு திருமணம் நடந்து முடிந்த நிலையில், அதற்கு பிறகும் அவரை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ய அந்த உறவினர் வற்புறுத்தியுள்ளார்.

    இந்நிலையில், இளம்பெண் தனது கணவர் வீட்டாரிடம் நடந்ததை கூறி போலீசாரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, அந்த உறவினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். #Delhi
    பீகார் மாநிலம் புத்த கயா கிராமத்தில் இயங்கிவரும் புத்தமத பள்ளியின் குரு, சிறுவர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். #Bihar #SexualAbuse
    பாட்னா:

    பீகார் மாநிலம் புத்த கயா கிராமத்தில் இயங்கி வரும் பிரஜ்னா ஜோதி புத்த ஆரம்ப பள்ளி மற்றும் தியான மையத்தின் குருவாக செயல்படுபவர் பந்த் சுஜோய் அக சங்பிரியா பண்டே. இவர் சமீபத்தில் தியான மையத்தில் சிறுவர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.

    அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சிறுவரின் பாதுகாவலர்கள் அளித்துள்ள இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் புத்த மதகுருவை கைது செய்துள்ளனர். மேலும், அவரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நாட்டின் பல்வேறு இடங்களில் சிறுவர், சிறுமியர் மீதான பாலியல் துஷ்பிரயோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கைது செய்யப்படும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என அரசுக்கு பலரும் வலியுறுத்தி வருகின்றனர். #Bihar #SexualAbuse
    ஒடிசா மாநிலத்தில் 8 வயது பள்ளி மாணவனை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு போக்ஸோ சட்டத்தின்கீழ் ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Odisha #POCSOact
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில் 8 வயது சிறுவன் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக வெளியான செய்தி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில், இந்த வழக்கு ராயகடா மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் சிறுவனின் வாக்குமூலத்தையும் தாண்டி 21 பேரை தீவிரமாக விசாரித்த நீதிமன்றம், மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு போக்ஸோ சட்டத்தின் படி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

    மேலும், 3 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ள நீதிமன்றம், ஒருவேளை அபராதம் கட்ட முடியாமல் போனால், கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டது. #Odisha #POCSOact
    ×